ஆயிரம் கிளைகள்.
நூற்றுக்கணக்காண வருடங்களாக,
ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து,
கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம்,
சாலையோரத்தில்..
இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
Simple blog on things I learn and enjoy.
நூற்றுக்கணக்காண வருடங்களாக,
ஆணி வேரிலிருந்து ஆயிரமாயிரம் கிளைகளாகப் பிரிந்து,
கல்லுடனும் மண்ணுடனும் இழைந்து உறவாடி ஏற்படுத்திக்கொண்ட பந்தம்,
சாலையோரத்தில்..
இவை இருந்த இடத்தில் இன்று (செங்)கல் முளைத்துவிட்டது!!
Posted by
சரவ் (Sarav)
Posted on
February 27th 2010
Filed under
General
Photos
Tags
iPhone camera snaps
நாம் அமெரிக்கால இருந்த காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணினது சென்னை டிசம்பர் சீசனை. எனக்குத் தெரிஞ்சவங்க யாரவது கச்சேரிக்குப் போய்ட்டு வந்தா அவங்களைத் தொலைபேசில கூப்டு, ‘என்னென்ன கீர்த்தனைகள் பாடினாங்க, புதுசா என்ன பாடினாங்க, எந்த ராகம் மெயின், எது சப் மெயின், ராகம் தானம் பல்லவியா, துக்கடா.. தில்லானா..’-னு கேள்வியா கேட்டுத் தொளைப்பேன். ஜெயா டிவி-ல ‘மார்கழி மகா உற்சவம்’ ஒளிபரப்ப ஆரம்பிச்சப்புறம், டிசம்பர் சீசன் சென்னையைத் தாண்டி தமிழ்நாடு முழுக்க பரவின மாதிரி இருந்துச்சு. இருந்தாலும் அமெரிக்கால இருந்த எனக்கு எட்டாக்கனியாதான் இருந்துச்சு. யாராவது டிவில இருந்து பதிவெடுத்து கூகுள் வீடியோ-ல அப்லோட் பண்ண மாட்டாங்களா-ன்னு தேடியிருக்கேன்.
இப்போ நான் சென்னைல இருக்கறதுனால, டிவில இருந்து பதிவெடுக்க சிறப்பு சாதனங்கள்லாம் வாங்கி, ‘மார்கழி மகா உற்சவம்’ நிகழ்ச்சிகளைப் பதிவு செஞ்சு ‘YouTube’-ல போடறேன். ஆனா, ‘YouTube’-ல ஒரு நிபந்தனை. எந்த வீடியோ க்ளிப்பும் பத்து(10:59) நிமிடத்துக்கு மேல இருக்ககூடாது. கர்னாடக இசைக் கச்சேரிகள பத்து நிமிஷ வீடியோ க்ளிப்புகளா போடறது அவ்ளோ சுலபமான வேலையா இல்லை. ராகம், கீர்த்தனை, நிரவல், ஸ்வரம், தனி-ன்னு இது எல்லாமே ஒன்னோட ஒன்னு இழைஞ்சிருக்கும். ஒரே இலைல பரிமாறி வெச்சிருக்கற தஞ்சாவூர் ஸ்பெஷல் மீல்ஸ் மாதிரி. சாம்பாரை இந்த இலைல சாப்டுட்டு ரசத்தை அடுத்த பந்தில சாப்டுங்க-ன்னு சொன்னா எப்டி இருக்குமோ அப்டி இருக்கும், ஒரு கர்னாடக இசைப் பாடலோட ராகத்தை அல்லது பாதி ராகத்தை மட்டும் ஒரு க்ளிப்ல பாரு, மீதியை அடுத்தக் க்ளிப்ல பாரு-ன்னு சொல்றது.
முடிஞ்ச வரைக்கும் எடிட் பண்ணி ஒவ்வொரு பத்து நிமிட க்ளிப்பையும் நிறைவோட கொடுக்கணும்-னு முயற்சி செஞ்சாலும், சில நேரத்துல இந்த நிபந்தனை கொஞ்சம் எரிச்சலூட்டத்தான் செய்யுது.
எந்த நிபந்தனைகளும் இல்லாம, இந்திய இசைக்கு மட்டுமே-ன்னு ஒரு வலைப் பிண்ணனும்-ங்கற ஆசையோட முதல் படி!!
இந்த வலைல இருந்தே வரும் முதல் பாட்டு..
பாட்டு உங்களுக்கும் தெரியுதா? கேட்குதா?
அடுத்தப் படிக்குப் போற வரைக்கும் பாட்டை நிறுத்தி வெச்சிருக்கேன்.
Posted by
சரவ் (Sarav)
Posted on
January 5th 2010
Filed under
General
Tags
பல மருத்துவ சின்ரோம்கள் மாதிரி ஞாயிறு மாலை சின்ரோம்னு ஒன்னு இருக்கறதாகத்தான் தோனுது. அப்படி ஒரு வெறுமை ஞாயிறு மாலைகள்ல சில நேரம் இருக்கும். அதுவும் தனியா இருக்கும்போது அதிகமாயிருக்குமோ என்னவோ. இன்னிக்கு மாலைல அப்படி இருக்கும்போது அதுக்கு என்னதான் காரணமா இருக்கும்-னு யோசிக்கறேன்.
அடுத்தநாள் காலைல அலுவலகம் போகணுமே-ங்கற கவலையா?
வீட்டையும் உறவுகளையும் விட்டு வெகுதூரம் வந்திருக்கோமே-ங்கற உணர்வா?
சனி ஞாயிற்றுக்கிழமைகள்ல கடை கடையா ஏறி அலைஞ்ச களைப்பா?
மனதளவுல மட்டும் இல்லை. உடலளவுலையும், தலைக்குள்ள தண்ணீர் புகுந்துகிட்ட மாதிரி ஒரு உணர்வு ஏன் ஏற்படுது?
உற்ற நண்பர்கள்கிட்ட இருந்துகூட விலகி கொஞ்சம் தனிமைய மனம் விரும்புதே, அது ஏன்?
ரகுமானின் இசையையும் ஸ்வர்ணலதாவின் குரலினிமையையும் மட்டுமே காட்டிக்கொண்டிருந்த ‘எவனோ ஒருவன் வாசிக்கிறான்’ இன்று வைரமுத்துவை அழைத்து பக்கத்திலும், கண்ணீரை அழைத்து இமைகளோரத்திலும் உக்கார வைத்திருக்கின்றதே அது ஏன்?
இந்த உணர்வுகள், மதியம் சாப்டதுக்கப்புறம் ஒரு குட்டித் தூக்கம் போட்டுட்டா இன்னும் ஏன் அதிகமாகணும்?
என்ன காரணமா இருக்கும்? உங்களுக்கு ஏதாவது தோனுதா?
Posted by
சரவ் (Sarav)
Posted on
October 26th 2009
Filed under
General
Tags
முந்தாநாள் இரவு, ஒரு 8 மணி இருக்கும், அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வர்ற வழில ஒரு வண்டில பெரிய பிள்ளையார உக்கார வெச்சு ஊர்வலமா வந்துட்டு இருந்தாங்க. அதுல மைக் வெச்சு இப்டி சொல்லிட்டு வந்தாங்க.
“அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே,
ஆழ்வார்திருநகர், 11வது தெரு, காய்கறி மார்க்கெட்டைச் சேர்ந்த, வக்ரதுண்ட மகா கணபதி, உங்கள் வீடுகளை நோக்கி ஊர்வலமாக வந்துகொண்டிருக்கிறார். அனைவரும் வந்து அருள் பெற்றுக்கொள்ளுமாரு கேட்டுக்கொள்கிறோம்!!
.
Posted by
சரவ் (Sarav)
Posted on
September 2nd 2009
Filed under
General
Tags
வேண்டுதலுக்காக மொட்டை ஏன் அடிக்கறாங்க? சாமிக்கு ஏன் முடியைக் கொடுக்கணும்? உண்டியல்ல காசு போட்டா அதுல ஒன்னு ரெண்டு சதவீதம் கோவிலுக்குப் போகுது. ஆடு கோழி பலி கொடுத்தா பிரியாணி கெடைக்குது. முடியைக் கொடுக்கறதால என்ன பயன்?
‘முருகா! என் புள்ளை எப்படியாவது பத்தாவது பாஸ் பண்ணிட்டா, பழநி-க்கு வந்து அவனுக்கு மொட்டை போடறேன்பா!’. உடல் நலம் இல்லாதபோது வேண்டப்படும் வேண்டுதல்கள்தான் அதிகமா இருக்கும்னு நெனைக்கறேன். என் மகனை எப்புடியாவது காப்பாத்திடு, மகளை குணப்படுத்திடு இப்டி பல வேண்டுதல்களோட பேர்ல மொட்டைகள் போட்டுக்கறாங்க. உசிறயே கொடுத்த கடவுளுக்கு ஏன் மக்கள் வெறும்ம்ம் முடியை மட்டும் தர்றாங்க-ங்கறது கொஞ்சம் வியப்பாதான் இருக்கு.
மொட்டை போட்டுக்கறதா ஏன் மக்கள் வேண்டிக்கறாங்க-ன்னு யோசிச்சதுல..
1. முடிசூட்டு விழா நாளில் ‘தன் மகன் இளவரசன் ‘சும்மாஒருபேரு சோழன்’ சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும்’ என்று இறைவனை வேண்டி தன் (மணி)முடியை இழந்தார், நம் மன்னர் ராஜாதிராஜ, ராஜ குல திலக, ராஜ பராக்ரம ‘சும்மாஇன்னொருபேரு சோழன்’-ன்னு அந்தக் காலங்கள்ல தண்டோரா போட்டதை மக்கள் தப்பா புரிஞ்சிட்ருப்பாங்களோ?
2. அந்தக் காலத்துல இப்போ இருக்கற மாதிரி க்ராப் கட்டிங்-லாம் இல்லாம எல்லோருமே பாகவதர் ஸ்டைல்ல முடி வெச்சிட்டு இருந்ததாலயும், ஷாம்பூக்கள் கண்டிஷனர்கள்-லாம் இல்லாததுனாலயும் தலைல வர்ற ப்ரச்சனைகளுக்கெல்லாம், ‘பாதாள பைரவி’ கோவில்ல போயி வேண்டிக்கிட்டு மொட்டை அடிச்சுக்கோ எல்லாம் சரியாய்டும்-னு சொன்னதுல ஆரம்பிச்சு எல்லாத்துக்கும் மொட்டை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்களோ!?
இப்டி பல யோசனைகள்.
என்னடா இவன் ஏன் திடீர்னு மொட்டையப் பத்தி யோசிக்கறான்னு நெனைக்கறீங்கதான?
Continue Reading »
Posted by
சரவ் (Sarav)
Posted on
August 28th 2009
Filed under
General
Tags
மொதல் மொதலா H1B விசால அமெரிக்கா போனப்போ, அமெரிக்கா எந்தத் திசைல இருக்குன்னுகூட எனக்குத் தெரியாது. வட அமெரிக்கா தென் அமெரிக்கா கண்டங்கள்னு எப்போவோ படிச்சிருக்கேனே தவிர, அதெல்லாம் மேப்ல எங்க இருக்குன்னு தெரியாது. அங்க மக்கள் எப்டி இருப்பாங்க, எப்டி பழகுவாங்க, எப்டி பேசுவாங்க, என்னென்ன மொழிகள் பேசறவங்கல்லாம் அமெரிக்கால இருக்காங்க, என்ன சாப்டுவாங்க எதுவும் தெரியாது. சாம்பிளுக்குக்கூட ஒரு பீஸ்ஸா சாப்டது கிடையாது. சபரிமலை சாஸ்தாவைத் தெரியுமே தவிர, பாஸ்த்தா-ன்னு ஒன்னைக் கேள்விப்பட்டது கூட கிடையாது.
எல்லா சாஃப்ட்வேர் மக்களுக்கும் அமெரிக்கா கனவு, அதே கனவு எனக்கும். க்ரூப் ஸ்டடி மாதிரி க்ரூப் கனவு. என் கூட வேலை பார்த்த நண்பர்களுக்குள்ள ஒரு போட்டி, யார் மொதல்ல அமெரிக்கா போறதுன்னு. அப்டி போட்டிபோட்டுதான் மொதல்ல அமெரிக்கா போனேன். ஸான் ஃப்ரான்ஸிஸ்கோ வந்து இறங்கி, இம்மிகிரேஷன்ல அவங்க என்னவோ கேட்க, நான் என்னவோ சொல்ல, போய்த்தொலைன்னு உள்ளே அனுப்பிட்டாங்க. யாரோ என்னைக் கொரியர்ல அனுப்பின மாதிரியும் அதை ஒருத்தர் வந்து பிக்கப் பண்ணிட்டு போற மாதிரியும்தான் இருந்துச்சு, என்னோட அந்த முதல் பயணம். ஒரு எக்ஸைட்மெட்டோ, சந்தோஷமான ஃபீலிங்கோ இல்லாத ஒரு காம்ப்ளிகேட்டட் ஃபீலிங். கொஞ்சம் சோகம், நிறைய பயம்.
அப்டியே கலிஃபோர்னியால ரெண்டு வாரம் ஓட்டிட்டு முதல் ப்ராஜெக்ட்டுக்காக கொலராடோ ஸ்ப்ரிங்ஸ்-ங்கற ஊருக்கு போனேன். மக்கள் கூட்டம் அதிகமா இல்லாத ஊர்(1997ல). சுத்தியும் நிறைய மலைகள். குளுமையான சூழல். அகலமான சாலைகள். வசதியான பெரிய வீடுகள். தெலுங்கு பேசற ஒரு தமிழ்க் குடும்பம், மலையாளி ஒருத்தர், சைவப் பிள்ளை ஒருத்தர், அசைவ அய்யர் ஒருத்தர்-ன்னு சில நண்பர்கள் கெடைச்சாங்க. இந்தியால இருந்த வரைக்கும் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் வேலை செஞ்ச எனக்கு 9-5 கலாச்சாரம் புதுசா இருந்துச்சு. 9 மணிக்கு அலுவலகம் போனா, 4.30 மணிக்கு எல்லொருமே கெளம்பிடுவாங்க. ஒரு நாள்ல முடியற சின்ன வேலையைக்கூட, ‘ஒரு வாரத்துக்குள்ள முடிஞ்சிடுமா?’-ன்னு கேட்கற முதல் அமெரிக்க மேனேஜர். இப்டி கொஞ்சம் கொஞ்சமா அமெரிக்க வாழ்க்கை பழக ஆரம்பிச்சுது. பிடிக்க ஆரம்பிச்சுது. ப்ளாக் ஆலீவ்களை மட்டும் எடுத்து போட்டுட்டு பீஸ்ஸாக்களை விருப்ப ஆரம்பிச்சேன். சிக்கன் பர்கர்களும், ஃப்ரைஸ்களும் பெப்ஸிகளோடு இணைந்து சுவைக்க ஆரம்பித்தன.
(இப்போ ஒரு பாட்டு.. ‘எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்’ பாட்டு மாதிரி.. பாட்டு ஓடும்போது பேக்ரௌண்ட்ல…)
தனியா வாடகைக்கு ஒரு சொகுசு வீடு பிடிக்கறேன்.
கார் ஓட்ட லைசன்ஸ் வாங்கறேன்.
புதுசா ‘ஹோண்டா’ கார் வாங்கறேன்.
ஸ்னோ பொழியுது. புது காரை ஸ்னோல ஓட்றேன்.
பல ஃபோட்டோக்களை எடுத்து ஊருக்கு அனுப்பறேன்.
நண்பர்களோட ஊர் சுத்தறேன்.
‘பேக் ஸ்ட்ரீட் பாய்ஸ்’ ‘ஸ்பைஸ் கேர்ல்ஸ்’ சீடி-க்கள் வாங்கறேன்.
‘I’ll do anything for you.. anything you want me to..’
‘I don’t care who you are.. what you do.. as long as you love me!!’
மாதிரி பாடல்களை பாத்ரூமில் பாடறேன்.
வார நாட்கள்ல மாலை முழுதும் விளையாட்டு-னு ஷட்டில், ராக்கெட் பால்-லாம் விளையாடறேன்.
வெள்ளி சனி-ல இரவுகள்லாம் முடிஞ்சு விடியற வரைக்கும் பல ஆட்டங்கள் ஆடறேன்.
ஆங்கிலப் படங்கள்ல வர்ற காமெடிகளுக்கு அரங்கம் அதிர சிரிக்கறேன். (எங்களுக்கும் புரியுமுல்ல!!)
சுற்றுலா வந்து வழிதெரியாம அலையற வெள்ளைக்காரங்களுக்கும் நான் வழி காட்டறேன்.
இந்தக் காட்சிகள்லாம் மாறி மாறி வருது..
(பாட்டு முடியுது.)
பாடல் முடிஞ்சு ஸ்டைலா காரை பார்க் பண்ணிட்டு அலுவலகத்துக்குள்ள போனா ஒரு அதிர்ச்சிச் செய்தி. அன்னியோட ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சு. அதாவது அந்த வேலை காலி.
கொஞ்சம் அல்லாடினப்புறம் அடுத்த வேலை கிடைச்சுது. அதுக்காக நியூ ஜெர்ஸி மாகானத்துக்கு போகணும்-னு சொன்ன உடனேயே நண்பர்கள் என் வயித்துல புளிய கரைக்க ஆரம்பிச்சாங்க.
‘நியூ ஜெர்ஸி-நியூ யார்க்-லல்லாம் கருப்பர்கள் ரொம்ப அதிகமா இருப்பாங்க. வெளில தனியா மாட்டிக்கிட்டீன்னா அவ்ளோதான். இருக்கறதையெல்லாம் உருவிகிட்டு விட்டுடுவாங்க. ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குள்ள போய்டணும். நைட்லல்லாம் இங்க சுத்தற மாதிரி சுத்த முடியாது. டாக்ஸிலல்லாம் தனியா மாட்டின, எங்கேயாவது கடத்திட்டு போய்டுவானுங்க’
‘இப்டிதான் என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்டு ஒருத்தன் நைட்டு 10 மணிக்கு அவங்க கிட்ட மாட்டிகிட்டான். அவன் கைல காசு இல்லாததுனால அவன அடிச்சு ATM-ல இருந்து காசு எடுத்து தர சொல்லியிருக்காங்க. ஒரு நாளைக்கு 300 டாலர்தான் லிமிட்-ங்கறதுனால 10 மணிக்கு 300 டாலர் எடுத்துட்டு நைட் 12 மணி வரைக்கும் அவனை பிடிச்சு வெச்சிருந்து 12 மணி ஆனப்புறம் இன்னொரு 300 டாலர் எடுக்க சொல்லி வாங்கிகிட்டு அடிச்சு வெரட்டீட்டாங்களாம்’
இப்டியெல்லாம் நண்பர்கள்(பாவிங்க, நண்பர்களா அவங்க!!) சொல்லச் சொல்ல எனக்கு அப்போவே வயிறு கலக்க ஆரம்பிச்சிடுச்சு.
நியூ ஜெர்சி விமான நிலையத்துல வந்து இறங்கி பேந்தப் பேந்த முழிச்சுகிட்டு டாக்ஸி ஸ்டாண்டு போனேன். ‘எடிசன்-ங்கற பாழாப்போன ஊர்ல போயி கெஸ்ட் ஹவுஸ் கட்டி வெச்சிருக்கானுங்க. விமான நிலையத்துல இருந்து நடந்து போற தூரத்துல இருக்கக்கூடாதா!! முருகா, சஷ்டியை நோக்க சரவண பவனா, சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலா, என்ன எப்டியாவது கெஸ்ட் ஹவுஸ்ல கொண்டு சேர்த்துடு’-ன்னு வேண்டிகிட்டே டாக்ஸிக்காக லைன்ல நின்னேன். லைன்ல முன்னாடி நின்னவங்க ஏறிப்போற ஒவ்வொரு டாக்ஸிலயும் கருப்பு ட்ரைவரா இல்லையான்னு பாத்துகிட்டே நின்னேன். கருப்பு ட்ரைவரா இருந்தா ஒரு நிம்மதி. அப்பாடா இந்த டாக்ஸி எனக்கில்ல-ன்னு. எனக்கு முன்னாடி நின்ன ஆட்களோட எண்ணிக்கை கொறையக் கொறைய படபடப்பு அதிகமாச்சு. வியர்த்து வழியுது. அடுத்ததா என்னை ஏத்திக்கிட்டு போகப்போற டாக்ஸி வந்து நிக்குது. கண்களை நல்லா மூடிக்கிட்டு, ‘கருப்பு ஆளா இருக்ககூடாது, முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா’-ன்னு கண்ணைத் திறந்தேன். என்னை முறைச்சு பார்த்து ஒரு கருப்பர், ‘ஹௌவ் யூ டூயுன்’ என்றார்.
அது முடிஞ்சு கிட்டத்தட்ட 10 வருஷம் ஆய்டுச்சு. சமீபத்துல அலுவலக வேலையா திரும்பவும் நியூ ஜெர்சி போயிருந்தேன். கருப்பர்கள் அதிகமா இருக்கற பகுதில தங்கறதுக்கு இடம் பார்த்திருந்தேன். ‘ஜர்னல் ஸ்கொயர்’ ரயில் நிலையத்துல இருந்து நடந்து போனா 30 நிமிஷ தூரத்துல இருந்துச்சு அந்த வீடு. பஸ்ல போனா 5 நிமிஷம் ஆகும். போற வழில ‘பட்டேல் ஸ்ட்ரீட்’-ங்கற இந்தியப் பொருட்கள் கிடைக்கற தெரு இருக்கு. இந்தியர்கள் வெச்சிருக்கற மளிகைக் கடைகள், ஹோட்டல்கள், நகைக் கடைகள், துணிக்கடைகள், சிம் கார்டு கடைகள், பீடாக் கடைகள்-ன்னு எல்லாமே இந்திய மயமா இருக்கற தெரு அது. கூட்டமும் அதிகமா இருக்கும். கட்டிடங்களோட வெளிப்புறத் தோற்றத்தைப் பற்றி அதிகம் கவலைப்படாததால கொஞ்சம் பழைய கட்டிடங்களாத்தான் தோற்றமளிக்கும். பான்பராக் எச்சில்களைப் பற்றியும், தேங்கி நிற்கும் தண்ணீரைப்(மழை நீர் இல்லை) பற்றியும் யாரும் அதிகம் அலட்டிக்கொள்ளாத தெரு.
ஒருநாள் வீட்ல இருந்து காலைல கிளம்பி அலுவலகம் போறதுக்காக ரயில் நிலையத்துக்கு போற பஸ்ல ஏறினேன். கூட்டம் அதிகமா இல்ல. மெக்ஸிகன் ஓட்டுனருக்குப் பின்னாடி இரண்டு பாட்டிகள், ஐ-பாடு-க்கு காதுகளைக்கொடுத்த ஒருத்தர், அப்புறம் எனக்கு முன் சீட்ல ஒரு கருப்பர் குடும்பம் உக்காந்திருந்தாங்க. ஒரு அப்பா, அவரோட ரெண்டு பசங்க. அப்பா பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு. பசங்க லூட்டி அடிச்சுட்டு இருந்தாங்க. பஸ் போற வழில இருந்த கடைகளையெல்லாம் பார்த்து ஜாலியா பேசிட்டே வந்தாங்க. பார்க்-கைப் பார்த்து ‘அப்பா, நாளைக்கு இங்க வரலாம்ப்பா’-ன்னாங்க. ‘ஆகட்டும்’-ங்கற மாதிரி அப்பா தலையை ஆட்டிட்டே பேப்பரை தொடர்ந்தாரு. பஸ் பட்டேல் தெருகிட்ட வந்தப்போ ரெண்டு பேரும் சில நொடிகள் கப்சிப்.
அப்புறம் பெரியவன் சொன்னான். ‘நான் ஒரு காலத்துலயும் இந்தப் பக்கமே போக மாட்டேன்ப்பா’
‘ஏன்?’ சின்னவன் கேட்டான்.
‘இது இந்தியர்கள் இருக்கற தெரு. ரொம்ப டேஞ்சரஸ்ஸான தெரு’
எனக்கு அதிர்ச்சி. அடப்பாவிகளா, யார்ற உங்களுக்கு அப்டி சொன்னா?ன்னு நெனைச்சுகிட்டு மேலும் கவனிச்சேன்.
‘இந்தத் தெருவுக்குள்ள நாம யாரும் ஈசியா போய்ட்டு வந்துட முடியாது. ரொம்ப பயமா இருக்கும்’ என்றவன், அந்தப் பக்கம் எட்டிப்பார்த்த சின்னவனோட முகத்தை திருப்பினான். ‘அந்தப் பக்கம் பாக்காத, திரும்பிக்கோ!!’ என்றான்.
அப்போதான் தோனிச்சு, இக்கரைக்கு அக்கரை கருப்புதானோ-ன்னு!!
Posted by
சரவ் (Sarav)
Posted on
August 17th 2009
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Tags
India is grappling with a swine flu epidemic. There is heightened panic among people following reports of growing number of HIN1 cases and the recent death of a school child in Pune.
Here’s an FAQ on the dreaded virus:
How do people become infected with influenza A (H1N1)?
Outbreaks in humans are now occurring from human-to-human transmission. When infected people cough or sneeze, infected droplets get on their hands, drop onto surfaces, or are dispersed into the air. Another person can breathe in contaminated air, or touch infected hands or surfaces, and be exposed.
What are the signs and symptoms of infection?
Early signs of influenza A (H1N1) are flu-like, including fever, cough, headache, muscle and joint pain, sore throat and runny nose, and sometimes vomiting or diarrhea. Like seasonal flu, swine flu may cause a worsening of underlying chronic medical conditions.
Is there any confirmation of transmission between pigs and humans at this point?
No.
How soon can someone with the flu infect someone else?
Infected people may be able to infect others beginning one day before symptoms develop and up to seven or more days after becoming sick.
What surfaces are most likely to be sources of contamination?
Germs can be spread when a person touches something that is contaminated with germs and then touches his or her eyes, nose, or mouth. Droplets from a cough or sneeze of an infected person move through the air.
How long can viruses live outside the body?
We know that some viruses and bacteria can live two hours or longer on surfaces like cafeteria tables, doorknobs, and desks.Frequent hand washing will help you reduce the chance of getting contamination from these common surfaces.
What can I do to protect myself from getting sick?
Currently available seasonal influenza vaccine does not protect against H1N1 flu. There are everyday actions that can help prevent the spread of germs that cause respiratory illnesses like influenza. Take these everyday steps to protect your health:
Cover your nose and mouth with a tissue when you cough or sneeze. Throw the tissue in the trash after you use it.
Wash your hands often with soap and water, especially after you cough or sneeze. Alcohol based hand cleaners are also effective.
Avoid touching your eyes, nose or mouth. Germs spread this way.
Try to avoid close contact with people having respiratory illness.
If one gets sick with influenza, one must stay at home, away from work or school and limit contact with others to keep from infecting them. However, if one is having any respiratory distress, one should report to a nearby hospital.
What should I do to keep from getting the flu?
First and most important: wash your hands frequently. Try to stay in good general health. Get plenty of sleep, be physically active, manage your stress, drink plenty of fluids, and eat nutritious food. Avoid touching surfaces that may be contaminated with the flu virus. Avoid close contact with people having respiratory illness.
Are there medicines to treat swine flu?
Yes. Oseltamivir is the recommended anti viral drug for the treatment and/or prevention of infection with the influenza A H1N1. If you get sick, antiviral drugs can make your illness milder and make you feel better faster.
They may also prevent serious flu complications. For treatment, antiviral drugs work best if started soon after getting sick (within 2 days of symptoms). The government has adequate stock and the drug is made available to government hospitals at the time of outbreak and would be available to you free of cost. The drug is to be administered under supervision of clinicians.
What should I do if I get sick?
If you live in areas where influenza A H1N1 cases have been identified and become ill with influenza like symptoms e.g. fever, body aches, runny nose, sore throat, nausea, or vomiting or diarrhea, you may contact their health care provider, particularly if you are worried about your symptoms.
Your health care provider will determine whether influenza testing or treatment is needed.
If you are sick, you should stay home and avoid contact with other people as much as possible to keep from spreading your illness to others. If you become ill and experience any of the following warning signs, seek emergency medical care.
In children emergency warning signs that need urgent medical attention include:
Fast breathing or trouble breathing
Bluish skin color
Not drinking enough fluids/eating food
Not waking up or not interacting
Being so irritable that the child does not want to be held
Flu-like symptoms improve but then return with fever and worse cough
Fever with a rash
In adults, emergency warning signs that need urgent medical attention include:
Difficulty breathing or shortness of breath
Pain or pressure in the chest or abdomen
Sudden dizziness
Confusion
Severe or persistent vomiting
Can I get influenza A H1N1 from eating or preparing pork?
No. swine influenza viruses are not spread by food. Eating properly handled and cooked pork products is safe.
Do’s:
* Wash your hands
* Avoid crowded places
* Stay more than an arm’s length from persons afflicted with flu
* Get plenty of sleep
* Drink plenty of water and eat nutritious food
DO Not’s:
* Shake hands or hug in greeting
* Spit in public
* Take medicines without consulting a physician
For people who are sick:
* Stay home and limit contacts with others as much as possible
* Rest and take plenty of liquids
* Cover your mouth and nose when you cough or sneeze
* Seek medical advice if needed.
Source: Ministry of Health
Posted by
சரவ் (Sarav)
Posted on
August 10th 2009
Filed under
General
Tags
Everything you need to know about Swine Flu
‘செட்டியாரே, கோல்டு பேப்பர் ஒன்னு, பச்சை பேப்பர் ஒன்னு, செகப்பு ஒன்னு’. ஆடிப்பெருக்கு அன்னிக்கு சப்பரத்துல/சப்பரதட்டில ஒட்றதுக்காக இப்டி பல வண்ணங்கள்ல பேப்பர் வாங்குவோம். பெரிய ஆளுயர சப்பரத்துல இருந்து தீப்பெட்டில செய்யற ‘மினி சப்பரம்’ வரைக்கும் வீதி நிறைய ஓடிட்டே இருக்கும். ஆடிப்பெருக்குக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடில இருந்தே சப்பரம் செய்யற வேலைகள் ஆரம்பமாய்டும். முந்தின வருஷம் பரண்ல போட்ட சப்பரத்தை எடுத்து ஆசாரிட்ட கொடுத்து சரி செஞ்சு தரச்சொல்லி அப்பாவை நச்சரிக்கணும், தீப்பெட்டி சப்பரத்துக்காக ரோட்ல கெடக்கற சோடா மூடியெல்லாம் எடுத்து நசுக்கி, தட்டி, சக்கரமா செய்யணும்-னு பல வேலைகள் மும்மரமா நடக்கும். யாரோட சப்பரம் அழகு, எதுல நெறைய வண்ணங்கள் இருக்கு, என்ன சாமி இருக்கு, கொடிகள் ஒட்டியிருக்கா, இல்ல வேல், சூலம், பூ மாதிரி டிசைன்கள் ஒட்டியிருக்கா இப்டி சக நண்பர்களுக்குள்ள போட்டிகள் இருக்கும்.
ஊரே இந்த நாள்ல வண்ண மயமா இருக்கும். காவேரி ஆத்துக்கும் அன்னிக்கு ஒரு புது அழகு வந்திருக்கும். ‘ஆடைகள்ல இத்தனை நிறமா’-னு வியக்கற அளவுக்கு அத்தனை நிறங்கள்ல ஆடைகள், முக்கியமா, தாவணிகள் போட்டுக்கிட்டு காவேரிக்கரைக்கு பெண்கள் வண்ணக் களஞ்சியமா வருவாங்க. கல்யாணம் ஆனவங்களுக்கு அவங்க தாலி நிலைக்கணும்-னும், கல்யாணம் ஆகாத ‘தாவணி’களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்-னும் நல்ல கணவனா அமையணும்-னும் வேண்டிக்கிட்டு, மஞ்சள் கயிற்றை காவேரிக்கரைல இருக்கற அரச மரத்துல கட்டிட்டு அவங்களும் கழுத்துல கட்டிப்பாங்க. வாண்டு பசங்களுக்கெல்லாம் சும்மா கைல கட்டிவிடுவாங்க. பேரிக்காய், நாவற்பழம், மாம்பழம் இதேல்லாம் படைப்பாங்க.
காவேரிக்கரையில நின்னு கன்னிப் பெண்கள்லாம் சாமி கும்பிடும்போது, அரும்பு மீசைப் பசங்க, பக்கத்துல இருக்குற பாலத்து மேலருந்து ஆத்துல குதிச்சு அவங்க வீரத்த காட்டுவாங்க. குதிக்கறதுலயும் பல வகையா குதிப்பாங்க. ‘தண்ணி எம்பல்’, ‘சொறுகல்’-இப்டி பல பெயர்கள் சொல்லுவாங்க. குதிக்கும்போது உயரமா தண்ணி மேல எழும்பினா அதுக்குப் பேரு ‘தண்ணி எம்பல்’. யோகா பண்றப்போ உக்காந்திருக்கற மாதிரி பொசிஷன்ல காலை மடிச்சுகிட்டு, பின்பக்கமா, கொஞ்சம் சாய்ஞ்ச மாதிரி குதிச்சா தண்ணி மேலே எழும்பி பாலத்துல நின்னு வேடிக்கை பார்க்கறவங்களையும், கரைல நின்னு சாமி கும்பிடறவங்களையும் கொஞ்சம் நனைக்கும். ‘சொறுகல்’-னா கையை மேல தூக்கி, தேர்தல் நேரத்துல அரசியல்வாதிகள் கும்பிடு போடற பொசிஷன்ல வெச்சுகிட்டு, தலைகீழா அம்பு மாதிரி தண்ணிக்குள்ள போறது. இப்டி குதிச்சா தண்ணீர் அதிகம் எழும்பாது. ‘தண்ணி எம்பல்’ போட்டு குதிச்சு உள்ள குதிக்கற அரும்பு மீசைகள் உடனே வெளில வரமாட்டாங்க. உள்ளேயே கொஞ்ச நேரம் தம் புடிச்சு இருந்துட்டு, கொஞ்ச தூரம் தள்ளி போயி வெளில வருவாங்க. தண்ணீலருந்து வெளில வந்து, குதிக்கும்போது எவ்ளோ உயரம் தண்ணீர் மேல வந்துச்சு, யார் யார் மேலல்லாம் பட்டுது, குதிச்சத யார் யாரெல்லாம் கவனிச்சாங்க இப்டி பார்வைலயே பல கேள்விகள் கேப்பாங்க.
கரைல நின்னு சாமி கும்பிடற சில நிமிடங்கள்ல தாவணிப் பெண்கள் முகங்கள்லயும் பல ‘ரசங்களை’ப் பார்க்கலாம். பாலத்துல இருந்து தண்ணில குதிக்கறவரு தன்னோட ‘ஆளா’ இருந்தா,
‘அடப்பாவி இவ்ளோ உயரத்துல இருந்தா குதிக்கப்போற?’-னு கொஞ்சம் கோவம். குதிச்சு தண்ணிக்குள்ள போனவரு மேல வர்ற வரைக்கும், ‘எங்கடா போயி தொலைஞ்ச’-ன்னு ஒரு பதற்றம் கலந்த தேடல். மேல வந்தொன்ன ‘அப்பாடா’-ன்னு கொஞ்சம் நிம்மதி. மேல வந்தவனோட பார்வை வேற பக்கம் போனா ‘அங்க என்னடா நோட்டம் விடற’-னு ஒரு அனல் பார்வை. இத்தனையையும் கவனிக்கற ‘விஷயம்’ தெரிந்த தோழியைப் பார்த்து ‘இங்க என்னடி பார்வை’-னு கேள்வி. இந்தப் பார்வைப் பரிமாற்றங்களையெல்லாம் வேற யாரும் கவனிக்கறாங்களா-னு ஒரு எச்சரிக்கைப் பார்வை. இவ்வளவும் ஒருத்தன் தண்ணீல குதிச்சு வெளில வர்றதுக்குள்ள நடக்கும்.
இப்டியெல்லாம் ஆடிப்பெருக்கை பார்த்து ரசிச்ச காலம் போயி, இப்பல்லாம், ஆடின்னா தள்ளுபடிதான் ஆய்ட்டு வருது. காவேரிக் கரைகள்ல இப்பவும் கூட்டம் இருந்தாலும் தாவணிகள் கம்மிதான். சென்னையைப் பொறுத்தவரையிலும் ஆடிக்கொண்டாட்டம், தி.நகர்ல மட்டும்தான். வட மாநிலங்கள்லருந்து இறக்குமதி ஆன நடிகைகள் தொலைக்காட்சி விளம்பங்கள்ல ஆடி ஆடி விளம்பரம் செய்யறது மாசம்தான் ஆடி மாசம். துணிக்கடைகள்லயும், நகைக்கடைகள்லயும் ஒருத்தரை ஒருத்தர் தள்ளும்படி ஆறதுதான் ஆடித் தள்ளுபடி.
Posted by
சரவ் (Sarav)
Posted on
August 3rd 2009
Filed under
General
Tags
ஆடி
ஆடிப்பெருக்கு
சப்பரம்
தாவணி
எட்டு கால்கள்
சுமந்த மேனி
எண்ணூறு கால்களில்.
எறும்புத் தோள்களில்
இறந்த சிலந்தி.
Posted by
சரவ் (Sarav)
Posted on
July 29th 2009
Filed under
General
Tags
‘என்னங்க, என் ச்சப்பல்ல குஷன்லாம் சுத்தமா போய்டுச்சுங்க, போட்டுட்டு நடந்தாலே காலை வலிக்குதுங்க’ என்று ஆரம்பித்தாள் என் மனைவி.
‘முருகா!! நாட்ல நல்லவங்களுக்கு மட்டுமே ஏம்பா சோதனைகளை கொடுக்கற?’ என்றேன் நான்.
கிரைண்டர் ஸ்லோவா ஓடுது, மிக்ஸில சட்னி சரியா அரைபட மாட்டேங்குது, ஃப்ரிட்ஜ்ல ஃப்ரீஸர் டீ-ஃப்ராஸ்ட் ஆகவே மாட்டேங்குது இப்டி எதுல என்ன ப்ரச்சனை வந்தாலும் உடனே புதுசா ஒன்னு வாங்கிடணும் என் மனைவிக்கு. அதுவரைக்கும் அர்ச்சனைதான். ஒவ்வொரு முறை சட்னி அறைபடும் போதும் என் காதுகளும் அறைபடும். கிரைண்டர் கல் உருளும் போது என் தலையும் உருளும்.
‘இதுக்கு ஏன் முருகனைக் கூப்டறீங்க, செருப்புன்னா தேயத்தான் செய்யும். தேயாத செருப்பா இரும்புல ஒன்னு வாங்கித்தந்துடுங்க, காலத்துக்கும் போட்டுக்கறேன்!!’
‘செருப்பு தேயாதுன்னு சொல்லலடி, அதுக்குன்னு மூனு மாசத்துலயேவா?’
‘மூனு மாசத்துல தேஞ்சுடும் தெரிஞ்சேவா வாங்குவாங்க? இல்ல புதுசு வாங்கணுமே-ன்னு ஆளு வெச்சுத் தேய்க்கறேனா!!’
‘இல்லதாண்டி, அதுக்காக மூனு மாசத்துக்கு ஒரு முறை ஒரு செருப்பு வாங்க முடியுமா?’
‘இது வாங்கி ஒன்னும் மூனு மாசம் ஆகலை, மார்ச் மாசம் வாங்கினது’
‘அப்டி பார்த்தாலும், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை-இன்னும் நாலு மாசம் கூட ஆகலியே’
‘ஆமா எனக்கு ஏதாவது ஒன்னு வேணும்னா மட்டும்தான் எல்லாக் கணக்கும் பார்ப்பீங்க!! எட்டணாவுக்கும் ஒர்ரூவாக்கும்!!’
‘நான் வாங்கினதுக்கு அப்புறம் செருப்பு வாங்கினாங்க உங்க அக்கா, நேத்து வந்திருந்தாங்களே, பார்த்தீங்கல்ல, வேற செருப்பு மாத்திட்டாங்க!!
ஓ அதுக்காகத்தானா இவ்வளவும்!! என்று நான் நினைத்ததை என் முகம் காட்டிக்கொகெடுத்துவிட்டது.
‘அவங்க வாங்கிட்டாங்க-ங்கறதுக்காக..!!’ நான் சொல்லி முடிக்கவில்லை.
‘வேண்டாங்க.. வேண்டாம், எனக்கு செருப்பே வேண்டாம். யார் எப்புடி வேணும்னாலும் இருந்துட்டுப் போவட்டும், நான் வெறும் கால்லயே நடந்துக்கறேன். செருப்பு போடாம என் கால் என்ன தேஞ்சுடவா போகுது. முந்நூறு ரூபாக்குகூட வக்கில்லாதவளாவே இருந்துட்டுப்போறேன்.’
புதுச் செருப்பு வாங்கற வரைக்கும் இனிமே இப்படித்தான்.
கொஞ்ச நேர அமைதியை என் மனைவிக்கு வந்த செல்ஃபோன் அழைப்பு களைக்கின்றது.
‘ஹலோ!! ம்மா.. ஹலோ நான் பேசறது கேக்குதாம்மா? ஹலோ!? ஹலோ!’ ஹாலில் இருந்து ஹலோ, சமையலறையிலிருந்து ஹலோ-ன்னு பல ஹலோக்கள் என் இரண்டு காதுகளிலும் மாறி மாறி எதிரொலித்ததே தவிர அவள் அம்மாவிற்கு ஒலித்ததாக தெரியவில்லை.
(இந்த நேரத்தில் என் மாமியாருக்கு மந்தமான காதுகள் இல்லை, என்பதையும் சொல்லிவிடுகிறேன்)
இன்றைக்கு தேய்ந்த செருப்புக்காக நடக்கும் இதே மாதிரியான காட்சிகள் போன மாசத்துல ஒரு முறையும், போன வாரத்துல ஒரு முறையும் நடந்துச்சு. இதே ‘ஹலோ ஹலோ’ செல்ஃபோனுக்காக, அவள் பேசுவது மறுமுனையில பேசறவங்களுக்கு கேட்கவே இல்லாலதால வெறு செல்ஃபோன் வாங்கணும்னு கேட்டு.
நான் பொதுவாவே கொஞ்சம் விவரமானவன். எது ரிப்பேரானாலும் நானே முயற்சி செஞ்சு சரி செஞ்சிடுவேன். முடியாத பட்சத்துல தெரிஞ்ச, நம்பகமானவர்கள்கிட்ட கொடுத்து சரி செஞ்சுப்பேன். ஃபேன், ரேடியோ, டி வி உட்பட வீட்டில் இருக்கும் மின் மற்றும் மின்னணு உபயோகப் பொருட்கள் பலதும் இதுல அடங்கும். நம்பகமான ஆட்களை தேர்வு செய்யறதுக்காக பல பரிசோதனைகளை வைப்பேன். ஏதாவது பழுதாய்டுச்சுன்னா அதை சரி செய்ய இரண்டு மூன்று கடைகள்ல விசாரிச்சு, குறைவாக சொல்ற, நயமாப் பேசற ஆளுங்ககிட்ட அதை சரி செய்யக் கொடுப்பேன். ஒரு முறை குறைஞ்ச செலவுல நல்லா சரிசெஞ்சு கொடுத்துட்டு, எதுனால பழுதாச்சுன்னு தெளிவா, புரியற மாதிரி, நயமா எடுத்து சொல்லிட்டா போதும். அடுத்த தடவை ஏதாவது சரியா வேலை செய்யலன்னா அதே கடைக்குத்தான் எடுத்துட்டுப் போவேன். ரெண்டு மூனுதடவை அதே கடைக்குப் போனப்புறம் அவரை நம்பகமானவர்கள் வரிசையில் சேர்த்துக்குவேன்.
அப்படித்தான் போன மாசமும் மனைவியோட செல்ஃபோன் பழுதானதும் அதை சரி செய்ய டீலர்கிட்ட கேட்டேன். அவங்க ‘ரெண்டு மூன்று நாட்கள் ஆகும்’-ன்னாங்க. இன்னும் சில கடைகள்ல சரியாவே பதில் சொல்லல. அப்புறம் ஒரு கடைல கேட்டேன்,
‘சார் இதுல மைக் போய்டுச்சு, நான் பேசறது அந்தப் பக்கம் பேசறவங்களுக்கு கேக்கவே இல்லை, மைக்க மாத்தித் தர முடியுமா?’-னு விளக்கிச் சொன்னேன்.
‘ஃபோன் கீழ விழுந்துதா சார்?’-ன்னு கேட்டாரு அந்தக் கடைக்காரரு.
‘ஆமாசார்’
என் போன்ல இருந்து அவர் போனுக்குக் கால் பண்ணி, ஹலோ ஹலோ-ன்னு என் போன்லயும் அவர் போன்லயும் மாத்தி மாத்தி சொல்லி, காதுல வெச்சுப் பார்த்தாரு.
‘சரி சார், ஐநூறு ரூபா ஆகும், பரவாயில்லையா?’
ஆறாயிரம் ரூபா கொடுத்து புது ஃபோன் வாங்க வைக்காம, ஐநூறு ரூபாய்லயே வேலை முடியுதே-ன்னு எனக்கு ரொம்ப சந்தோஷம்.
‘சரிசார்’
‘பணத்தை கவுண்டரில் கட்டிடுங்க, ஒரு அரை மணில வாங்க, ரெடி பண்ணிடறேன்’.-ன்னாரு.
பணத்தை கட்டினதும்,
‘இந்தாங்க சார், மெமரி கார்டு, சிம் கார்டு, பேட்டரி. ஜாக்கிறதையா வெச்சுக்கோங்க. வேற கடைகள்ல கொடுத்தாலும் இதையெல்லாம் கொடுத்துடாதீங்க. மாத்தினாலும் மாத்திடுவாங்க.’ இவ்ளோ நியாயமானவரா இருக்காரே-ன்னு உடனேயே அவரை என்னோட நம்பகமானவர்கள் வரிசைல சேர்த்துக்கிட்டேன்.
‘சொன்ன மாதிரியே அரை மணில சரி செஞ்சுக் கொடுத்துட்டாரு. அங்கேயிருந்தே வேற நம்பருக்கு கால் பண்ண சொல்லி,
‘நல்லா கேக்குதுல்ல சார், திருப்திதான?’ என்று எனது திருப்தியை உறுதிப்படுத்திக்கொண்டார்.
ஆனா போன வாரம் திரும்பவும் அதே மாதிரி பிரச்சனை. என் மனைவி பேசறது எதிர் முனைக்காரங்களுக்கு கேட்காம போய்டுச்சு. திரும்பவும் அவர்கிட்டயே எடுத்துட்டுப் போனேன்.
‘தண்ணி ஏதும் பட்டுச்சாசார்’
‘தெரியலை சார், என் மனைவியோடது. சமையல் அறைல வெச்சிருக்கும்போது ஏதாவது பட்றுச்சோ என்னவோ!!’
‘அப்டிதான் சார் இருக்கும். போனவாட்டியும் நம்மகிட்டயே மைக் போட்றுக்கீங்க, அதுனால இந்த முறை வெறும் முந்நூறு குடுங்க சார் போதும். ஸ்பேர் பார்ட்டுக்கு மட்டும் கொடுங்க, லேபர் எதுவும் வேண்டாம்’-ன்னு சொல்லிட்டாரு. நாட்ல இவங்களை மாதிரி நாலு பேர் இருக்கறதுனாலதான் மழையே பெய்யுது-ன்னு நெகிழ்ந்து போய்ட்டேன்.
இன்னிக்குத் திரும்பவும் அதேப் ப்ராப்ளம். எங்கேயாவது தண்ணீல ஃபோனைப் போட்டுட வேண்டியது. அப்புறம் ஹலோ ஹலோன்னா எப்படி கேட்கும். சரி செய்யக் கடைக்கு எடுத்துட்டுப் போனேன்.
துரதிஷ்டவசமா அந்தக் கடை மூடியிருந்ததால, வேற கடைக்கு போக வேண்டியதா ஆய்டுச்சு.
‘சார், இந்த ஃபொன்ல மைக் போய்டுச்சு, நான் பேசறது எதிர் முனைல இருக்கறவங்களுக்கு கேட்கவே மாட்டேங்குது. அதை மாத்தித் தர முடியுமா?’
‘மைக் போய்டுச்சா?’
ஃபோனை வாங்கிப் பார்க்கிறார்.
‘மைக் போய்றுக்காது சார். மைக்கெல்லாம் ஃபோனோட மதர் போர்டுலயே வர்றது. அப்டியே போனாலும் எடுத்துட்டெல்லாம் போட முடியாது. மதர் போர்டு சர்க்யூட்லயே இம்பிள்ட்-சார்’
ஃபோனைப் பிரித்துப் பார்த்துக்கொண்டே,
‘அப்டியே மாத்தி சால்டரிங்கெல்லாம் பண்ணினாலும், கீ பேடெல்லாம் முட்டிக்கிட்டு நிக்கும், ஃபோனை சரியா மூடவே முடியாது.’
என் போனில் இருந்து அவர் ஃபோனுக்கு கால் பண்ணினார். என் ஃபோனில் கீழ்ப்பகுதியை நல்லா அழுத்திப் பிடிச்சுக்கிட்டு பேசினாரு. அப்புறம் அவர் போனை என்கிட்ட கொடுத்து, ‘கேக்குதாப் பாருங்க’-ன்னாரு.
அந்தப் பக்கம் அவர் என் போன்ல பேசினது எனக்கு நல்லா கேட்டுது.
‘ஒன்னும் இல்ல சார், கீழ மைக் இருக்குற எடத்துல ஸ்க்ரூ கொஞ்சம் லூசா இருக்கு. டைட் பண்ணித் தர்றேன்’-ன்னு டைட் பண்ணிக்கொடுத்தாரு.
‘கீழ ஸ்க்ரூ அடிக்கடி லூஸாய்ட்டா ஒரு அஞ்சு ரூபாய்க்கு ‘ஃபெவி க்விக்’ வாங்கி இந்த ஓரத்துல போட்டுடுங்க சரியாய்டும்’-னாரு.
‘சர்விஸ் ச்சார்ஜெல்லாம் ஒன்னும் வேனா சார்’-ன்னுட்டாரு.
திரும்பி வரும்போது, மூடியிருந்த முந்தைய கடையப் பார்த்தேன். ‘திருப்பதி செல்ஃபோன் சர்விஸ்’-ன்னு போர்டுல லைட் மட்டும் எறிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அந்தக் கடைக்காரன் கிட்ட இதுக்கு முன்னாடி சர்விஸ் பண்ணினதுக்கு எவ்ளோ கொடுத்தேன்னு உங்களுக்கும் எனக்கும் மட்டும்தான் தெரியும். நான் என் மனைவிகிட்ட சொல்ல மாட்டேன். ஒருவேலை நீங்க அவங்களைப் பார்க்க நேர்ந்தாலும் சொல்லிட மாட்டீங்களே??
Posted by
சரவ் (Sarav)
Posted on
July 17th 2009
Filed under
General
சிறுகதை முயற்சிகள்
Tags