ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். பொருள்: மழையை வாரி வாரி வழங்கக்கூடியது ‘புயல்’. அதனுடைய வளம் குன்றிப் போனால், உழவர்கள் ஏரைப் பிடித்து உழவுத் தொழில் செய்வது இய(ல்)லாமல் போய்விடும். வள்ளுவர் காலத்துல எத்தன பேரு உழவுத் தொழில் பண்ணியிருப்பாங்க, புயல்/மழைய எவ்ளோ முக்கியமா வள்ளுவர் எழுதியிருக்காரு. இப்போ எவ்ளோ பேரு உழவுத் தொழில் பண்றாங்க. இப்போ மழையோட முக்கியத்துவம் என்னன்னெல்லாம் யோசிச்சு பாத்துக்க வேண்டியது நம்ம பொறுப்பு!!
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
December 16th 2005
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. பொருள்: நமக்கு தீமை செய்தவருக்கும்கூட நன்மையையே செய்யாவிட்டால், நாம் கற்ற கல்வியினால் அடையும் பயன்தான் என்ன? ஒடனே, கோவில் பக்கமா ரோட்ல நடந்து போயிட்டு இருக்கும்போது ‘சார்லி’யோ இல்ல வேற யாரோ மூஞ்சில எச்சி துப்பிட்டா பதிலுக்கு நாம பெப்ஸி வாங்கித் தரணுமா? அப்டின்னு கேக்கக்கூடாது!!. நம்மள சுத்தி இருக்கறவங்க, நண்பர்கள் இவங்கள்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ எதாவது தப்பு செய்யறாங்கன்னு வெச்சுக்கோங்க, அவங்ககிட்ட வறிஞ்சு கட்டிகிட்டு, போட்டி [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
September 24th 2005
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. பொருள் : மனதில் நினைக்கும்போதே சந்தோஷத்தையும், பார்த்த மாத்திரத்திலேயே மகிழ்ச்சியையும் தரும் சக்தி கள்ளுக்கு இல்லை. காதலுக்கு உள்ளது!! செலபேருக்கு பாட்டில பாத்தவொடனே கிக்கு வந்துடும். வள்ளுவர் அவங்களையெல்லாம் கணக்குல சேக்கலபோல!!
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
August 16th 2005
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. பொருள் : நோயற்ற வாழ்வு கொண்ட மக்கள், நல்ல பொருளாதார வளர்ச்சி, நல்ல விளைச்சல், இன்பமான சூழல், சிறந்த பாதுகாப்பு. இவை ஐந்தும் ஒரு நாட்டின் அணிகலன்களாகப் போற்றப்படுகின்றன. நோயற்ற வாழ்வு-ன்னா தலைவலி, ஜலதோஷம் கூட இல்லாததுன்னு இல்ல. காலரா, அம்மை மாதிரி அலை அலையா மக்கள கொல்ற நோய்கள் இல்லாதது. எவ்ளோ பொருளாதார வளர்ச்சி இருந்தாலும், விளைச்சல் இருந்தாலும், மற்ற நாடுகளோட (தேவையில்லாம) போர் செய்யறதால [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
August 15th 2005
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு. பொருள் : அரசாங்கத்திற்கு நிதி சேர்க்கும் திட்டங்களை தீட்டி, வரும் வருவாயைப் பெருக்கி, அதை தீய வழிகளில் செலவிடாமல் பாதுகாத்து, நல்ல வழிகளில் திட்டமிட்டு செலவு செய்யும் அரசே நல்ல அரசாகும். இயற்றல். அரசாங்கத்துக்கு பணம் வேணும்னா வரிய ஏத்தறதோ, இல்ல பஸ் ரயில்களோட டிக்கெட் கட்டணத்த ஏத்தறது மட்டும் இல்லாம இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா யோசிக்காலாமோ!! உதாரணத்துக்கு, அமெரிக்கால போலீஸ்களுக்கு அவங்க கலெக்ட் பண்ற அபராதங்கள்ல [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
August 1st 2005
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின். பொருள்: மன உறுதியும், வெற்றிபெறவேண்டும் என்கிற துடிப்பும் அதிகமாகக் கொண்டவர்களுக்கு, இல்லாமை ஒரு குறையோ, இழிவோ இல்லை. இந்த குறள ரெண்டு விதமா பாக்கலாங்க. விதம் ஒன்னு: செலபேர பாத்திருக்கேங்க. அவங்களோட வேலைய ஒழுங்கா செய்யாம இருக்கறதுக்கு ஏதாவது ஒரு கொறைய காரணமா சொல்லுவாங்க. உதாரணமா… ‘என்னப்பா, நல்லா படிக்கிறியா?’ ன்னு கேட்டா, ‘எங்க, புத்தகம் வாங்கவே காசில்ல’ ‘எங்க, எங்க வீட்ல கரண்டே இருக்கறதில்ல’ அப்படின்னு [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
May 27th 2005
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. பொருள்: ஒரு நல்ல அரசருக்கு அல்லது அரசுக்குத் தேவை, பயம் இல்லாமை, அனைவருக்கும் உதவி செய்யும் குணம், நல்ல அறிவாற்றல், செயல்களை முன்னின்று செய்து வெற்றியை நோக்கி அழைத்துச்செல்லும் ஊக்கம் ஆகிய இந்த நான்கும் ஆகும். அரசியல்வாதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இந்த பண்பெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்-ங்க. வல்லரசு நாடுகளே எதிர்த்தாலும் பயப்படாம செஞ்ச நியூக்ளியர் சோதனை. சுனாமி மாதிரி பேரழிவு ஏற்பட்டப்போ நம்ம நாட்டோட இல்லாம, பக்கத்து [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
May 25th 2005
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். பொருள் : தன்னுடைய இன்பத்தைத் தேடாமல், தான் மேற்கொண்டுள்ள செயல்களில் வெற்றியைத் தேடும்குணமுடையவர்கள், தன்னைச் சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பங்களை போக்குபவர்களாகவும், அவர்களைத் தாங்கும் தூண்போலவும் இருக்கின்றனர். தன்னோட லாபத்தப் பாக்காம, தான் செய்யற காரியத்துல கவனம் செலுத்தறவங்க யாருன்னு யோசிச்சுப் பாத்தேன். மொதல்ல ஞாபகத்துக்கு வந்தவங்க படை வீரர்கள்தாங்க. தன்னோட உயிரைப் பத்திக்கூட கவலைப்படாம தன் நாட்டுக்காக உழைக்கற [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
May 25th 2005
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். பொருள் : ஒருவர் நமக்கு மோசமான ஒரு துன்பத்தைச் செய்தாலும், அதற்கு முன்னர், எப்பொழுதாவது, அவர் நமக்கு செய்த ஒரேஒரு நல்ல விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அவர் மீது எழும் கோபம் குறைந்துவிடுகிறது. அவர் செய்த துன்பத்தினால் ஏற்பட்ட ‘வலி’யின் வலிமையும் குறைந்துவிடுகிறது. சொந்தக்காரங்களுக்குள்ள வர்ற சண்டைகள்-லாம் பாத்திருக்கீங்களா?? ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்பாங்க. திடீர்ன்னு ஒருநாள் சண்டை போட்டுப்பாங்க. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பரம எதிரிகளா [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
May 21st 2005
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். பொருள் : ‘கடவுளே காப்பாத்து’ என்று கடவுளை அழைப்பதால் நடக்காத செயல்கள்கூட, முயற்சியுடன் உழைப்பவர்களுக்கு வெற்றியைத் தேடித் தருகின்றன. எங்க ஊர்ல ஒரு கத சொல்லுவாங்க. ஒரு ஊர்ல ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். சுனாமி வந்த மாதிரி. வீடுகளல்லாம் அடிச்சுகிட்டு போய்டுச்சாம். இது மாதிரி வெள்ளம் அடிச்சுகிட்டு போனப்போ, ஒருத்தன் மட்டும் வீட்டு கூரைல உக்காந்திருந்தானாம். அந்த வழியா மரக்கட்டைகள பிடிச்சுகிட்டு போனவங்கள்லாம் ‘வாப்பா, இந்த [...]
Read Full Post »
Filed under
General
பிடித்த குறட்கள்
Posted on
May 17th 2005