ஒரு மாநிலத்தோட முதலமைச்சரா இருக்கறவரு கோடிக்கணக்கான மக்களோட நம்பிக்கையா இருக்கற ஒரு விஷயத்தைப் பத்தி பேசும்போது பொறுப்போட பேசவேண்டாமா? தேவையில்லாத வீண் கமெண்ட்டுகள் அடிக்கலாமா? சேது சமுத்திரத் திட்டம் முக்கியம்தான். அதுக்காக, ‘ராமர் இஞ்சினியரா’, ‘அவரே பாலத்தைக் கட்டினாரா’-ங்கற கமெண்ட்டெல்லாம் தேவையா?
சில விஷயங்கள்லாம் மக்களோட நம்பிக்கைகள். அதையெல்லாம் ஆராயக்கூடாது. ராமரை கடவுளாக பாக்கறவங்க, நம்பறவங்க, வணங்கறவங்க எத்தனை கோடி பேர் இருக்காங்க. தமிழகத்துல மட்டும் இல்ல. உலகம் பூரா. அத்தனை கோடி மக்களோட உணர்வுகளை மதிக்க [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 26th 2007
கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கெவின் கார்ட்டர்-ங்கறவரைப் பற்றி கேள்விப்பட்டேன். Photojournalist. 1993-ல சூடான் நாட்டுக்கு, அந்த நாட்டோட நிலைமையைப்பத்தியும், உள்நாட்டு கலவரங்களையெல்லாம் படம் எடுக்கவும் போயிருக்காரு. அங்க பசிப் பேய் தலைவிரித்து ஆடினத பார்த்துட்டு அதைப் படம் பிடிக்க ஆரம்பிச்சிருக்காரு. ஒரு சிரிய பெண் குழந்தை உணவு வழங்கும் இடத்துக்கு போகும் வழியில், நகர்ந்து போக சக்தியில்லாமல் கிடப்பதையும், ஒரு கழுகு அந்தக் குழந்தையின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பதையும் படம்பிடிச்சிருக்கிறாரு. சூடான்ல இருந்து போனதுக்கப்புறமும் அந்தக் குழந்தை [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 25th 2007
20 ஓவர்கள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்.
வெளையாட வந்த கொஞ்ச நாட்கள்லயே எல்லோர் மனதையும் கவர்ந்த தோனி இப்போ கேப்டனா ஆகி வெற்றி வாகைய சூடியிருக்காரு. இவர் மட்டும் என்னத்த மாத்திடப்போறாரு-ன்னு நெனைச்ச எனக்கு, அவரோட அப்ரோச் ரொம்ப பிடிச்சிருந்தது. இங்கிலாந்து அணியோட ஜெயிச்சதுக்கப்புறம் கொடுத்த பேட்டில, ‘நாங்க 100% உழைப்பை கொடுக்க தயாரா இருக்கோம். வெற்றியைப் பத்தி அவ்ளோவா அக்கறை இல்லை.’-ன்னு சொன்னது, மற்ற வீரர்களோட தோல்கள்ல இருந்து பெரிய சுமைய இறக்கினது [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 25th 2007
வீட்ல எதையாவது தேடிகிட்டு இருக்கும்போது, ரொம்ப நாள் முன்னாடி உபயோகப்படுத்தின பேனா, சட்டை, பர்ஸ் இப்டி எதாவது கிடைச்சு, ஒரு குட்டி ‘ஃப்ளாஷ் பேக்’கை உண்டாக்கி, பழைய நினைவுகளைத் திரும்ப திரையிட்டு, சந்தோஷப்படுத்தும். அதுமாதிரி என்னோட முந்தைய பதிவுகள்ல இருந்து கெடைச்சது!!
Words travel. Moods won’t.
Posted by சரவ் (Sarav) on 03/30/05 1:25 AM | Tagged as: பிடித்த குறட்கள், General
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பொருள் : யார் எதைச் சொன்னாலும் [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 17th 2007
தமிழ் திரையுலகத்துல ரீமிக்ஸ் ஒரு ஃபாஷனா ஆய்டுச்சு. பழைய படங்கள எடுத்து அப்டியே திரும்பவும் எடுக்கறது. பழைய பாடல்கள எடுத்து மாத்தறது-ன்னு இந்த ரீமிக்ஸ் கலாச்சாரம் பிரபலமாயிட்டு இருக்கு.
நமக்கு (கொஞ்சம்) தெரிஞ்ச ஏரியால நாமும் ரீமிக்ஸ் பண்ணலாமே-ன்னு ஆரம்பிச்சேன். சுஜாதா சார் எழுதின சிறுகதை ஒன்ன எடுத்துகிட்டு அதை ரீமிக்ஸ் பண்ணினா எப்டி இருக்கும்-ன்னு ஆரம்பிச்சு போன வாரம் ரெண்டு மூணு நாள் ஒக்காந்து ஒரு கதை தயார் பண்ணினேன். ஆனா எங்க வீட்ல இருக்குற பாழாப்போன [...]
Read Full Post »
Filed under
General
Posted on
September 7th 2007